Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை

Published on செவ்வாய், 6 ஜனவரி, 2009 1/06/2009 08:00:00 AM //

இலங்கையில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிபட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளதாக தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!