Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

காஸா மீது தரைவழி தாக்குதல் தொடுக்க

Published on சனி, 3 ஜனவரி, 2009 1/03/2009 02:17:00 PM //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 436க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2250க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக காஸாவின் எல்லையின் இஸ்ரேல் தரைப்படையினரை அனுப்பி வந்தது. எந்நேரமும் காஸாவினுள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி காஸா பகுதியை மீண்டும் ஆக்ரமிக்கப்படும் என்று தெரிகிறது.


காஸா பகுதியில் இருந்த அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சார்ந்த சுமார் 400 பேர் காஸாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தரைவழி தாக்குதல் குறித்து நேற்று விவாதித்ததாகவும் தரைவழி தாக்குதலுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காஸாவின் மீது தரைவழி தாக்குதல் நடத்தக் கூடாது என்று எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!