Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

ஸ்டாலின் மீது கிரிமினல்

Published on செவ்வாய், 6 ஜனவரி, 2009 1/06/2009 01:42:00 AM //

திருமலங்கலம் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலளார் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கைலிகள், சேலைகள், தங்க மோதிரம், கறி விருந்து போன்றவற்றை அளித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் இலஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டன. இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் மீது வழக்குத் தொடர உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு.க. வுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவவிக்கின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!