Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆப்கானில் 30 காவலர்கள் கொலை

Published on வியாழன், 1 ஜனவரி, 2009 1/01/2009 05:22:00 PM //

ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹேல்மன்ட் மாநிலத்தில் தாலிபான் ஆதரவாளர்கள் 30 காவலர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் உள்ளூர் அரசு அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்நிகழ்வில் 2 தாலிபான் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டதாகவும் நான்கு பேர் காயமுற்றதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அஹமதி கூறினார். 32 காவலர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். கொல்லப்பட்ட காவலர்கள் மாவட்ட அரசு அதிகாரியின் காவலர்கள் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக புதன் கிழமையன்று இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 2008 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 137 ஆகும். 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானில் கடந்த ஆண்டு வெளிநாட்டுப் படையினர் அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர்.

2009 மத்தியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கூடுதல் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப் படுவார்கள் என்று அமெரிக்க கடந்த மாதம் அறிவித்தது நினைவு கூரத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!