Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 25, 2025

காஸா : 14ஆவது நாளாகத் தொடரும்

Published on வெள்ளி, 9 ஜனவரி, 2009 1/09/2009 11:53:00 AM //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது "ஆபரேஷன் கேஸ்ட் லீட்" என்ற பெயரில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை 781 பேர் பலியானதாகவும், 3100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் உடனடியான சன்டை நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்கவில்லை. மீதம் உள்ள 14 உறுப்பு நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.


இந்நிலையி்ல் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இன்றிரவு நடைபெற்ற தாக்குதலில் பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி என்ற இடதுசாரி அமைப்பின் தலைவர் காயமுற்றதாகவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வியாழன் அன்று ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றிய பின் நடைபெற்ற தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!