Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கொழும்பில் குண்டு வெடித்து 5 பேர் பலி

Published on: ஞாயிறு, 28 டிசம்பர், 2008 //
இலங்கையின் வடக்குப் பகுதியில் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்த படகு அது என்று இராணுவத்தினர் கூறினர்.

இசம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு அருகில் வாத்தலா என்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் குண்டு வெடித்தது. இதில் 5 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

50 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

Published on: //
சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தி்ற்கும் இடையில் நடந்த சன்டையில் குறைந்தது 50 இராணுவத்தினர் கொல்லப் பட்டதாகவும் 90 பேர் காயமுற்றதாகவும் விடுதலைப் புலிகள் கூறினர். இராணுவத்தினரின் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 16 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் உடுப்புக்குளம் என்ற பகுதியில் நடந்த சன்டையில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமுற்றனர் எனவும் விடுதலைப் புலிகள் கூறினர். விடுதலைப் புலிகளின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை என்று தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீன் மீதான தாக்குதல் இன்றும் தொடர்கிறது

Published on: //
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 225பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700க்கும் அதிகமானோர் காயமுற்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தாக்குதலைத் தொடர்ந்தது.

மசூதி மற்றும் தொலைக்காட்சி நிலையம் உள்பட காஸாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இன்று மட்டும் சுமார் 20 முறை குண்டுகளை வீசியதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்தனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!