Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

50 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

Published on ஞாயிறு, 28 டிசம்பர், 2008 12/28/2008 10:33:00 AM //

சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தி்ற்கும் இடையில் நடந்த சன்டையில் குறைந்தது 50 இராணுவத்தினர் கொல்லப் பட்டதாகவும் 90 பேர் காயமுற்றதாகவும் விடுதலைப் புலிகள் கூறினர். இராணுவத்தினரின் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 16 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் உடுப்புக்குளம் என்ற பகுதியில் நடந்த சன்டையில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமுற்றனர் எனவும் விடுதலைப் புலிகள் கூறினர். விடுதலைப் புலிகளின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை என்று தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!