Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் - ஐ.நா.

Published on: வெள்ளி, 26 டிசம்பர், 2008 //

நேற்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காவல் நிலையம், தொழிற்கூடம், மசூதி மற்றும் அல் அக்சா எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 40 இடங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் இதுவரை 271 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், 600க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. குரோஷியாவுக்கான ஐ.நா. தூதரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவருமான நெவேன் ஜுரிகா அறிக்கையை வாசித்தார். இஸ்ரேலையோ அல்லது ஹமாஸஸ் இயக்கத்தையோ நேரடியாகக் குறிப்பிடாமல், "இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான நிலை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை

Published on: //
பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சற்று முன் கிடைத்த தகவல்படி கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் வருமாறு:

மொத்த தொகுதிகள் : 87
தேசிய மாநட்டுக் கட்சி : 23
மக்கள் ஜனநாயகக் கட்சி : 20
காங்கிரஸ் :18
பாரதிய ஜனதா கட்சி : 13
மற்றவர்கள் : 13

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது 8 பேர் சுட்டுக் கொலை

Published on: //
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகே உள்ள கோவினா என்ற இடத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கிறிஸ்துமதஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் அன்பளிப்புப் பொருள் கொண்டு வருவது போல் உள்ளே நுழைந்தார். பின்பு அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து கதவைத் திறந்த 8 வயது சிறுமியை நோக்கி சுட்டார். கூடி இருந்தவர்கள் தப்பிப்பதற்காக வெளியே ஓடினர். பின்னர் அந்த வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தினார். அதன் பிறகு அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

புரூஸ் பர்டோ என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் இவர் மீது எவ்வித குற்றப் புகார்களும் இல்லை என்பதாகவும் இவரது மனைவி இவரைக் கடந்த வாரம் விவாகரத்து செய்ததாகவும் அதனால் கோபமுற்ற இவர் தனது முன்னாள் மைத்துனர் வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது இச்சம்பவத்தை நிகழ்த்தியாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வில் இவரது முன்னாள் மனைவி மற்றும் அவரது பெற்றோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் சிறையில் 350 இந்தியர்கள்

Published on: //
பிரிட்டன் சிறையில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 350 ஆக இருக்கிறது எனவும், கடந்த செப்டம்பர் 2005ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 259ஆக இருந்தது எனவும் அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சிறையில் இருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2006 பிப்ரவரியில் 10,265 என்றும் அது இந்த ஆண்டு செப்டம்பரில் 11 சதவீதம் அதிகரித்து 11,168 வெளிநாட்டினர் சிறையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சிறையில் உள்ள சில வெளிநாட்டினர் விவரம்:

பாகிஸ்தான் - 406
வியட்நாம் - 460
போலந்து - 452

தகவல்: PTI
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!