கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது 8 பேர் சுட்டுக்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகே உள்ள கோவினா என்ற இடத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கிறிஸ்துமதஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் அன்பளிப்புப் பொருள் கொண்டு வருவது போல் உள்ளே நுழைந்தார். பின்பு அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து கதவைத் திறந்த 8 வயது சிறுமியை நோக்கி சுட்டார். கூடி இருந்தவர்கள் தப்பிப்பதற்காக வெளியே ஓடினர். பின்னர் அந்த வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தினார். அதன் பிறகு அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
புரூஸ் பர்டோ என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் இவர் மீது எவ்வித குற்றப் புகார்களும் இல்லை என்பதாகவும் இவரது மனைவி இவரைக் கடந்த வாரம் விவாகரத்து செய்ததாகவும் அதனால் கோபமுற்ற இவர் தனது முன்னாள் மைத்துனர் வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது இச்சம்பவத்தை நிகழ்த்தியாகக் கூறப்படுகிறது.
இந்நிகழ்வில் இவரது முன்னாள் மனைவி மற்றும் அவரது பெற்றோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.