Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் - ஐ.நா.

Published on வெள்ளி, 26 டிசம்பர், 2008 12/26/2008 07:31:00 PM //


நேற்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காவல் நிலையம், தொழிற்கூடம், மசூதி மற்றும் அல் அக்சா எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 40 இடங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் இதுவரை 271 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், 600க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. குரோஷியாவுக்கான ஐ.நா. தூதரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவருமான நெவேன் ஜுரிகா அறிக்கையை வாசித்தார். இஸ்ரேலையோ அல்லது ஹமாஸஸ் இயக்கத்தையோ நேரடியாகக் குறிப்பிடாமல், "இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான நிலை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!