Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

Published on: வியாழன், 25 டிசம்பர், 2008 //
இந்தியா பாகிஸ்தான் உறவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையி்ல் சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் சவுத் அல்ஃபைசல் நாளை இந்தியா வருகிறார். பாகிஸ்தான் மீது சவூதிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுமாறு இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது சில மணி நேர இந்தியப் பயணத்தின் போது மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விரிவாக விளக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா சவூதி அரசை இது தொடர்பாக தொடர்பு கொண்டதாகவும், சவூதி அரசு இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Source: PTI

லாஹூர் குண்டு வெடிப்பு : இந்தியர் கைது

Published on: //
பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அரசு அலுவலர் குடியிருப்பில் நேற்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுதீஷ் ஷர்மா என்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் மூன்றுபேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!