Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா

Published on வியாழன், 25 டிசம்பர், 2008 12/25/2008 10:18:00 AM //

இந்தியா பாகிஸ்தான் உறவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையி்ல் சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் சவுத் அல்ஃபைசல் நாளை இந்தியா வருகிறார். பாகிஸ்தான் மீது சவூதிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுமாறு இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது சில மணி நேர இந்தியப் பயணத்தின் போது மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விரிவாக விளக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா சவூதி அரசை இது தொடர்பாக தொடர்பு கொண்டதாகவும், சவூதி அரசு இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Source: PTI

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!