அங்கோலா-போப்., வரவேற்பு கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!
Published on: திங்கள், 23 மார்ச், 2009 //
அங்கோலா,
ஆப்பிரிக்கா,
கூட்ட நெரிசல்,
போப்பாண்டவர்,
மத குரு,
மரணம்
கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட், ஆப்பிரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க செயண்ட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவரைப் பார்ப்பதற்காக மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் போப்பாண்டவரை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டனர். பலர் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கிய பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மிதித்தபடி மற்றவர்கள் சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் நெரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



