Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில்

Published on: திங்கள், 12 மார்ச், 2012 //

உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில்

Posted: 11 Mar 2012 02:23 PM PDT

டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சவூதிப் பல்கலைக்கழக மாணவியர்மீது தாக்குதல்

Posted: 11 Mar 2012 02:14 PM PDT

அப்ஹா: மன்னர் காலித் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அலுவலர்களால் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) பல்கலைக்கழக மாணவர்கள் யாவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


"கொலைவெறித் தாக்குதலை நிறுத்து!"- துருக்கியில் மாபெரும் பேரணி

Posted: 11 Mar 2012 12:33 PM PDT

அன்காரா: கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) இஸ்ரேலின் காஸாமீதான படுகொலைத் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியத் தலைநகர் அன்காராவில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.


2014ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் : ஆர்.எஸ்.எஸ்

Posted: 11 Mar 2012 11:30 AM PDT

புது டெல்லி : காங்கிரஸ் கட்சியை பீடித்துள்ள நோயை போன்று பி.ஜே.பியிலும் தொண்டர்களை விட பெரும் எண்ணிக்கையில் தலைவர்கள் இருப்பதால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.


தமிழ்த்தேர் இத‌ழின் மனசு சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா!

Posted: 11 Mar 2012 10:53 AM PDT

 தமிழ்த்தேர் இத‌ழின் மனசு சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா!துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான "மனசு" சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.


பெண்களை இழிவுபடுத்திய குஷ்பு ஐ.நா.வில் பேசலாமா?

Posted: 11 Mar 2012 08:45 AM PDT

பெண்களை இழிவுபடுத்திய குஷ்பு ஐ.நா.வில் பேசலாமா?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நடிகர் வடிவேல் பிரச்சாரம் செய்வாரா?
- கந்தன்,கனடா


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல்

Posted: 11 Mar 2012 08:37 AM PDT

அமெரிக்க சிப்பாய் ஒருவர் காந்தஹாரில் வீடுகளினுள் நுழைந்து 15 பேரைக் கொன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.


"சிற்பி ஜெயலலிதா" - சரத்குமாரின் உவமை

Posted: 11 Mar 2012 07:15 AM PDT

சங்கரன்கோவில் - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குட்டிக்கதை கூறி மக்களிடம் ஓட்டு சேகரித்தார். எதிர்கால சந்ததியினருக்காக சிந்தனையோடு ஜெயலலிதா செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


மணல் திருட்டை தடுத்த இளைஞர் லாரி ஏற்றி கொலை

Posted: 11 Mar 2012 06:54 AM PDT

திருநெல்வேலி - சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடை செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் நிகழ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 11 Mar 2012 06:43 AM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

 


பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க.பிரமுகர் மாரடைப்பால் மரணம்

Posted: 11 Mar 2012 06:26 AM PDT

தூத்துக்குடி - சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நகர்மன்றத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


"தமிழக மின்வெட்டு" -நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படுமா?

Posted: 11 Mar 2012 06:17 AM PDT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.


மாத விடாய் ரத்தத்தை உணவில் கலந்து சிறுவனை கொலை செய்ய முயற்சி

Posted: 11 Mar 2012 03:23 AM PDT

குவைத் சிட்டி : தான் பணியாற்றும் வீட்டு முதலாளியின் மகனை கொலை செய்ய மாதவிடாய் ரத்தத்தை உணவில் கலந்த வேலைக்காரப் பெண்மணியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏலத்தில் கூட யாரும் வாங்க லாயக்கற்ற மாநிலம் மேற்கு வங்காளம்: முதல்வர் மம்தா

Posted: 11 Mar 2012 12:05 AM PST

கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்துக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி மத்திய அரசின் இப்பாரபட்ச போக்கால் ஏலம் விட்டால் கூட ஏலம் எடுப்பதற்கு யாரும் தயங்கும் நிலையில் மோசமான மாநிலமாக மேற்கு வங்காளம்உள்ளது என்று கூறியுள்ளார்.


இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: விஜயகாந்த்!

Posted: 10 Mar 2012 10:33 PM PST

இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: விஜயகாந்த்!சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தேமுதிக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையை இந்தியா ஆதரிக்கவேண்டும் - சுப்ரமணியசாமி!

Posted: 10 Mar 2012 10:09 PM PST

இலங்கையை இந்தியா ஆதரிக்கவேண்டும் - சுப்ரமணியசாமி!புது டெல்லி: விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.


எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு!

Posted: 10 Mar 2012 09:53 PM PST

எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு!பெங்களூர் : தன்மீது சுமத்தப்பட்டிருந்த சுரங்க மோசடி புகார் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த எடியூரப்பாவின் கோரிக்கையைப் பாஜக தலைவர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 10 Mar 2012 09:44 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


உ.பி: முதல்வர் பதவியேற்கும் அகிலேஷ் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள்!

Posted: 10 Mar 2012 09:05 PM PST

உ.பி: முதல்வர் பதவியேற்கும் அகிலேஷ் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள்!உத்தரபிரதேசம்: வரும் மார்ச் 15 ஆம் தேதிஉத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ், தன் கட்சி தொண்டர்களின் வன்முறை செயல்களைச் சமாளிப்பதே அவர் எதிர்கொள்ளும் பெரும்பிரச்சனையாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.


அகிலேஷ் யாதவ் 15-ஆம் தேதி பதவியேற்பு

Posted: 10 Mar 2012 09:22 PM PST

உ.பி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், சமாஜவாதி கட்சி 224 தொகுதிகளில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.


உத்தர்கண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!

Posted: 10 Mar 2012 08:54 PM PST

உத்தர்கண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!நீண்ட இழுபறிக்குப் பின்னர், கவர்னர் முன்னிலையில் 36 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு நடத்தியதைத் தொடர்ந்து உத்தர்கண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.


நடிகை குஷ்பூ மீது பாய்ந்தது மற்றொரு வழக்கு!

Posted: 10 Mar 2012 08:24 PM PST

குஷ்பூ மீது பாய்ந்தது மற்றொரு வழக்கு!சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி மு க வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடிகை குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.


தலைப்புச் செய்திகள்(11/03/2012)

Posted: 10 Mar 2012 08:01 PM PST

போதிய மருந்துகளின்றி உயிருக்குப் போராடும் நோயாளிகள்

காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.





Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!