Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

"பாபர்மசூதியை இடித்தது நியாயம் தான்" - பாஜக வின் அலிஆசாத்

குலாம்நபி ஆசாத்தின் தம்பியும் பாஜக பிரமுகருமான அலி ஆசாத் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.அண்மையில்தான் இவர் பாஜக கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த இடத்தில் அன்றும், இன்றும் ஒரு மசூதி இருந்ததில்லை" என்ற அலி ஆசாத், காங்கிரஸ் கட்சி அத்வானி மீது பழிசுமத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

தம்பியின் கருத்து குறித்து காஷ்மீர் முன்னாள்முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் கருத்துத் தெரிவிக்கையில் 'பொருட்படுத்தத் தேவையில்லாத பேச்சு" என்றார். "அவரிடத்தில் எனக்கு சற்றும் தொடர்பு இல்லை" என்றார் குலாம்நபி ஆசாத்.

"அத்வானி, வாஜபேயியை அரபிக்கடலில் எறியுங்கள்" - காங்கிரஸ்

"அத்வானி, வாஜபேயியை அவர்கள் முதலில் அரபிக்கடலில் எறியட்டும்" என்று காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலளித்துள்ளது. காங்கிரஸ் முதியவர்களின் கட்சியாகிவிட்டது என்று கிண்டலடித்த நரேந்திர மோடிக்கு பதிலடியாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்.
"காங்கிரஸ்சாரின் முதிய வயது பற்றிய கமெண்ட் அடித்த புண்ணியவான் முதலில் தன் கட்சியில் அதை அமல்படுத்தட்டும்" என்றார் அவர்.

ஒரு மனிதரின், நாட்டின், சமூகத்தின் பண்பாடு என்பது சிறுவர்களையும் முதியவர்களையும் பெண்களையும் அவர்கள் நடத்தும் விதத்தில்தான் இருக்கிறது என்ற ஹரிபிரசாத் மோடியின் வஞ்சகப்பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகச் சொன்னார்.

மரபையும் பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கடைபிடித்து வருவதாகச் சொன்ன அவர், பிஜேபி குறித்து கூற ஒன்றுமில்லை என்றார். "எப்போதும் அக்கட்சி தேவையில்லாதவற்றையே பிரசினைப்படுத்துகிறது"

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்று தரையிறங்கிய விமானத்தில் ஐந்து பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆம், நேப்பிள்சில் இருந்து கிளம்பிய இரட்டை எந்திர விமானம் ஒன்று தானியங்கி நிலையில் 10,000 அடி தூரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், விமானிக்கு மரணம் சம்பவித்தது.

இதையடுத்து, பயணிகளில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ள, ஒற்றை எந்திரம் உரிமம் மட்டுமே பெற்றிருந்த அந்தப் பயணிக்கு தேவையான குறிப்புகளை அளித்து அந்த இரட்டை எந்திர விமானத்தை தென்மேற்கு ஃப்ளோரிடா விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக மாகாண விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தின் மற்ற ஐந்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!