Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

Published on திங்கள், 13 ஏப்ரல், 2009 4/13/2009 10:08:00 PM // , , , , , , , ,

விமானம் ஓட்டிய பயணி: சமயோசிதத்தால் தப்பிய ஐந்து உயிர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நேற்று தரையிறங்கிய விமானத்தில் ஐந்து பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆம், நேப்பிள்சில் இருந்து கிளம்பிய இரட்டை எந்திர விமானம் ஒன்று தானியங்கி நிலையில் 10,000 அடி தூரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், விமானிக்கு மரணம் சம்பவித்தது.

இதையடுத்து, பயணிகளில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ள, ஒற்றை எந்திரம் உரிமம் மட்டுமே பெற்றிருந்த அந்தப் பயணிக்கு தேவையான குறிப்புகளை அளித்து அந்த இரட்டை எந்திர விமானத்தை தென்மேற்கு ஃப்ளோரிடா விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக மாகாண விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தின் மற்ற ஐந்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!