Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹாக்கி: கோப்பையை வென்றது இந்தியா!

Published on: ஞாயிறு, 12 ஏப்ரல், 2009 // , , ,
மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி இறுதிப்போடியில் இந்திய அணி மலேசியாவை வென்று சாதித்துள்ளது.

லீக் போட்டியில் மலேசியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியை "டிரா' செய்தது. இதன்மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதேபோல் பாகிஸ்தான், எகிப்து அணிகளை வீழ்த்திய மலேசிய அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியை "டிரா' செய்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மலேசிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு தகுதிபெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதுவரை இத்தொடரில் ஐந்து முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, நான்கு முறை (1985, 1991, 1995, 2009) கோப்பை வென்றுள்ளது.

இதன்மூலம் இத்தொடரில் இந்திய அணி சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்றுள்ளது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நான்கு முறை (1983, 2000, 2006, 2007) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அர்ஜென்டினா அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து கோப்பையை பறிகொடுத்தது.

வெற்றி வாகை சூடிய இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் M.S.கில் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உலக நாடுகள் ஆர்வம்!

100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் பயன்படுத்த மலேசியா,சிங்கப்பூர்,மொரீசியஸ்,நமீபியா போன்ற நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த ஒரு நாட்டிலும் எதுபோன்ற காலநிலையிலும் சிறப்பாக இயங்கக்கூடியவை. அதனை கடினமாகவும் கையாளலாம். வாக்குப் பதிவில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துமே துரிதமாக நடைபெற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெரும் உதவியாக உள்ளன. இதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களை இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுள்ளது உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கெனவே நேபாளம், பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு கடந்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்த 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!