Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உலக நாடுகள் ஆர்வம்!

Published on ஞாயிறு, 12 ஏப்ரல், 2009 4/12/2009 10:08:00 PM // , , ,

100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் பயன்படுத்த மலேசியா,சிங்கப்பூர்,மொரீசியஸ்,நமீபியா போன்ற நாடுகள் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்த ஒரு நாட்டிலும் எதுபோன்ற காலநிலையிலும் சிறப்பாக இயங்கக்கூடியவை. அதனை கடினமாகவும் கையாளலாம். வாக்குப் பதிவில் இருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்துமே துரிதமாக நடைபெற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெரும் உதவியாக உள்ளன. இதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களை இந்தியாவில் வடிவமைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுள்ளது உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கெனவே நேபாளம், பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு கடந்த ஆண்டு தேர்தலில் பயன்படுத்த 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!