Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம்

Published on: ஞாயிறு, 4 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு காஸா எல்லைக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. காஸாவினுள் புகுந்த உடன் காஸா பகுதியிலிருந்த பெட்ரோல் நிலையங்களைக் குண்டு வீசி அழித்தது. இன்று அதிகாலையில் மசூதி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை 480க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காஸாவே நோக்கி பல பகுதிகளிலிருந்து இராணுவம் முன்னேறி வருகிறது.

இதனிடையே ஹமாஸ் படையினர் இராணுவத்தினர் கடுமையாகப் போராடி வருகின்றன. இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் உயிருடன் பிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதுவரை 10க்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேலிய தரப்பில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

சிதம்பரம் அமெரிக்கா நோக்கி..!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கங்களைக் குறித்த ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.அவர் செல்லும் தேதி இதுவரை நிச்சயிக்கப்படவில்லை.

அதனைக் குறித்துச் சிதம்பரம் கூறும்பொழுது, "அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கும் தேதி விரைவில் நிச்சயிக்கப்படும். மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான மேலும் ஆதாரங்களை வெளியுறவு துறை அமைச்சகம் திரட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம்" எனக் கூறினார்.

கடந்த தினம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர்களைப் பாகிஸ்தானில் வைத்தே விசாரணை செய்யலாம் எனவும் அமெரிக்கா கூறியிருந்தது.

காஸாவினுள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது

Published on: //
கடந்த 8 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடுத்து வந்தது. கூடவே காஸாவின் எல்லை அருகே தரைப்படையையும் குவித்து வந்தது. இந்நிலையில் சற்று நேரம் கிடைத்த தகவல்படி இஸ்ரேலிய இராணுவத்தின் தரைப்படை காஸாவினுள் நுழைந்தது. உள்ளூர் நேரம் இரவு பத்து மணி அளவிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலர் கொல்லப் பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. காஸா மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை நிலவரப்படி இஸ்ரேலியத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக இருந்தது. காஸா பகுதியிலிருநு்து வீசப்பட்ட ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!