Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஐ.பி.எம். நிறுவனத்தில் இனி தேநீர், காபி இல்லை!

Published on செவ்வாய், 14 ஏப்ரல், 2009 4/14/2009 10:08:00 PM // , , , , , , , ,

கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு தேநீர், காபி போன்றவை இலவசமாக அளிப்பது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் இந்நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு அவர்களின் இல்லங்களில் நிறுவனத்தின் சார்பில் வழங்கி வந்த இலவச இணைய இணைப்பும் நிறுத்திக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எம் நிறுவனம் 2800 ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைககளில் பணிபுரியும் சுமார் 5000 பேர் வேலை இழக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!