Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

Published on வெள்ளி, 6 மார்ச், 2009 3/06/2009 05:53:00 PM // , , , , , ,

உத்திரப்பிரதேச மாநிலத்தின் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

கடுமையான வார்த்தைகள் எதையும் உபயோகிக்க நான் விரும்பவில்லை. ஆனால் கூட்டணி முறிந்துவிட்டது. காங்கிரஸ் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த அன்றே கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் செய்தியளார்களிடம் கூறினார்.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு அளிக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருந்தது. குறைந்தது 25 தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!