Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இந்தியா மொரீஷியசுக்கு துருவ் ஹெலிகாப்டர் அளிக்கிறது!

Published on ஞாயிறு, 1 மார்ச், 2009 3/01/2009 05:27:00 PM // , , , , , , ,

இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறைந்த எடையுள்ள "துருவ்" ஹெலிகாப்டர்களை மொரீஷியசுக்கு விற்பனை செய்ய இந்திய அரசும் மொரிஷீயஸ் அரசும் இன்று ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த வகை ஹெலிகாப்டரில் ராக்கெட்டுகள் மற்றும் 20 mm துப்பாக்கிகளைப் பொருத்த முடியும். வான் தாக்குதலுக்கான ஏவுகணைகளையும் பொருத்த முடியும். இதன் விலை 7 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இந்தியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை வாங்கும் இரண்டாவது நாடு மெரிஷீசியஸ் ஆகும். இதற்கு முன் ஈகுவெடார் இந்தியாவிடமிருந்து இத்தகைய ஹெலிகாப்டர்களை வாங்கியிருக்கிறது. இதுவரை ஈகுவெடாருக்கு 5 ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுவிட்டன. மேலும் இரு ஹெலிகாப்டர்கள் 6 மாதத்திற்குள் அனுப்பப்படும்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!