Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

தமிழ்நாடு: +2 தேர்வுகள் இன்று

Published on திங்கள், 2 மார்ச், 2009 3/02/2009 01:44:00 PM // , , , , , ,

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளி தேர்வு மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 25-ந் தேதியும், மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 18-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ப்ளஸ் டூ எனப்படும் மேல்நிலைப்பள்ளித் தேர்வுகள் இன்று தொடங்கின. 1738 மையங்களில் நடக்கும் தேர்வுகளில் ஆறுஇலட்சத்து எண்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மூத்த ஆசிரியர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள் இப்படைகளில் இடம் பெற்றிருப்பார்கள்.

தேர்வு முடிவுகளை முடிவு வெளியிட்ட உடன் இலவசமாக அறிய பள்ளிக்கல்வி இணையதளத்தில் இப்போதே மாணவர்கள் தங்கள் தேர்வு ரிஜிஸ்டர் எண் மற்றும் தங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை இப்போதே பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!