Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கப்படும்: ப.சிதம்பரம்

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 01:50:00 PM // , , , , ,

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு அரசே பெரும் தொகை கொடுத்து உதவுவதற்கு அமெரிக்கா முடிவெடுத்துள்ளது அறிந்ததே!

அதே போல, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ பேங்க்., விஜயா பேங்க் ஆகிய வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3,800 கோடி மத்திய அரசு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்ட உதவியாக யூகோ பாங்க் - 450 கோடி, சென்ட்ரல் பேங்க்- 700 கோடி, விஜயா பேங்க் - 500 கோடி, நடப்பு நிதியாண்டிலும் அடுத்தகட்டமாக மீதத்தொகை 2009-10 ம் ஆண்டிலும் இவ்வுதவிகள் வழங்கப்படும் என்றார் அவர். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு அதிகரிக்கும்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!