Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத்

Published on செவ்வாய், 27 ஜனவரி, 2009 1/27/2009 10:39:00 PM // , , ,

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பெரும் பணியை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 120 கோடி இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை இந்த ஆணையம் கண்கானிக்கும்.


ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (National Authority for Unique Indentify - UID) திட்டக் குழுவுடன் இணைந்து அடையாள எண்களைத் தரும். உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை பதிவளார் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவர் மற்றும் மாநில அதிகாதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அடையாள எண்கள் வழங்கப்படும். படிப்படியாக வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும்.

தவறுகளைக் களைவதற்காக அடையாள அட்டையில் புகைப்படமும், இரத்தப் பிரிவு போன்ற தகவல்களும் இடம்பெறும். புதிதாக பதிவு செய்வதற்கோ அல்லது தகவல்களில் மாற்றம் செய்வதற்காக எளிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!