Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆதாரங்களுக்கு பதில் தராத பாகிஸ்தான்!

Published on ஞாயிறு, 11 ஜனவரி, 2009 1/11/2009 08:52:00 PM // ,

இந்தியா சமர்ப்பித்துள்ள ஆதாரங்களுக்கு இதுவரை ஏதும் பதில் தரவில்லை பாகிஸ்தான்.

மும்பை பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்களைப் பாகிஸ்தானிடம் சமர்ப்பித்தது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சரான ஆனந்த் ஷர்மா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மும்பையின் இப் பயங்கரவாதச் செயலில் தொடர்புடைய தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் அவை மீதான அரசின் நடவடிக்கை பற்றியும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷர்மா.

மேலும், பாகிஸ்தான் இச்செயலைச் செய்தது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்றை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இனை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பிக்கப் பட வேண்டும் என்று பிஜேபியின் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று பாஜக நேற்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!