Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முஸ்லிம் குடும்பம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது

Published on சனி, 3 ஜனவரி, 2009 1/03/2009 04:36:00 PM //

ஜனவரி முதல் தேதியன்று வாஷிங்டனிலிருந்து புளோரிடா செல்லவிருந்து விமானத்திலிருந்து 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் சந்தேகத்தின் பேரில் இறக்கிவிடப்பட்டது. இந்தக் குழுவைச் சார்ந்த காஷிப்  இர்பான் என்பவர் கூறுகையில், தன்னுடைய சகோதரரும் அவரது மனைவியும் தங்களுக்குப் பாதுகாப்பான இருக்கை கிடைத்ததாகப் பேசிக் கொண்டிருந்தனர். "என் ஜன்னலுக்கு அருகில்தான் ஜெட் இருக்கிறது" என்று அவர்களில் ஒருவர் கூறியதைக் கேட்ட சக பயணிகள் விமானப் பணிப்பெண்ணிடம் கூற, விமானத்திலிருந்த 104 பயணிகளும் இறக்கப்பட்டனர்.


FBIயின் விசாரணைக்குப் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறிய போதிலும், ஏர் ட்ரான் எனும் விமான நிறுவனம் 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தை மட்டும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. இந்தச் செயலை விமான நிறுவனத்தின் செய்தியாளர் நியாயப் படுத்தினார். அவர்கள் விமானத்தினுள் இருந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மருத்துவரான இர்பான் கூறுகையில், தங்கள் தோற்றம் காரணமாகவே இவ்வாறு நடத்தப்பட்டோம் என்றார். அவரது சகோதரரோ, அவர்கள் மிகவும் பயந்தவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் கவலையான ஒன்று என்று கூறினார்.

தெற்காசிய இனத்தவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த முஸ்லிம் குடும்பம் வேறு விமானத்தில் சென்றது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!