Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காங்கிரசுடனான உறவு அடுத்தமாதம் பரிசீலனை - பா.ம.க.

Published on திங்கள், 5 ஜனவரி, 2009 1/05/2009 07:45:00 PM //

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து அடுத்த மாதம் பரிசீலனை செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தில்லி சென்று பிரதமரிடம் முறையிட்ட பிறகும் அதுபற்றி எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். 

இனியாவது, இலங்கையில் போரை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார். 

காங்கிரசுடனான கூட்டணி குறித்த அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!