Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கற்பழிப்புக்குப் பழி மூன்றுபேர் கொலை

Published on ஞாயிறு, 11 ஜனவரி, 2009 1/11/2009 03:52:00 PM //

தன்னுடைய ஐந்து வயது மகளைக் கற்பழித்த ஒருவனின் குடும்பத்தினர் மூன்று பேரைக் கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டார் அச்சிறுமியின் தந்தை. உத்திரப் பிரதேச மாநிலம் சீத்தாபூர் அருகில் உள்ள லெஹர்பூர் எனும் கிராமத்தில் நேற்று இந்நிகழ்வு நடந்தது. சிறுமியைக் கற்பழித்ததாய் பிரமோத் என்பவர் மீது இம்மாதம் 2ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சீத்தாபூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தை தனது உறவினர்களுடன் சென்று பிரமோதின் தந்தை மற்றும் இரு சகோதரர்களைச் சுட்டுக் கொன்றார். இது பழிவாங்கல் நடவடிக்கை என்று மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை கொலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!