Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

காஸா மீது இராசயண குண்டு

Published on திங்கள், 5 ஜனவரி, 2009 1/05/2009 02:27:00 AM //



பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் இரசாயண குண்டுகளை வீசுவதாக தகவல்கள் கூறுகின்றன.

காஸா மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் நார்வே நாட்டைச் சார்ந்த மருத்துவர் பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இஸ்ரேல் யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த குண்டுபட்டு ஒருவர் காயமுற்று உயிர் பிழைத்தாலும் அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்றார். இஸ்ரேலிய மருத்துவர்கள் தங்கள் நாட்டு அரசிடம் இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிரிழப்பவர்கள் மற்றும் காயமுறுபவர்கள் பொதுமக்கள்தான் அதிகம் என்றும் அவர் கூறினார்.

Tags:

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!