Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

Published on: வியாழன், 9 பிப்ரவரி, 2012 //




    செய்தித் துளிகள்!

    Posted: 08 Feb 2012 11:18 AM PST

    செய்தித் துளிகள்!கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.


    உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு

    Posted: 08 Feb 2012 08:41 AM PST

    உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.


    முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை

    Posted: 08 Feb 2012 08:34 AM PST

    முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில்,  பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது.


    குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

    Posted: 08 Feb 2012 08:22 AM PST

    புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான  இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


    கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது: சுப்ரமணியன் சுவாமி

    Posted: 08 Feb 2012 08:18 AM PST

    பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி,  இலங்கை அதிபர் ராஜபக்சேவை  நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


    ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி!

    Posted: 08 Feb 2012 08:13 AM PST

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள்  ஆட்டத்தில் இந்தியா 4வீரர்களை மீதம்வைத்து வெற்றிபெற்றது.


    போருக்கு சென்ற இளைஞர்கள் பார்-க்கு செல்கிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்

    Posted: 08 Feb 2012 08:07 AM PST

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.


    தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு!

    Posted: 08 Feb 2012 03:40 AM PST

    தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு; காரணங்களை அடுக்கும் அரசு!தமிழகத்தில் வரலாறோ, பூகோளமோ  இதுவரை காணாத மின் தடை நடைமுறையிலுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக செய்திகள்  வெளிவந்துள்ளன.


    கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது வழக்கு

    Posted: 08 Feb 2012 02:25 AM PST

    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


    ஆபாசப் படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா!

    Posted: 07 Feb 2012 11:48 PM PST

    கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த  போது அமைச்சர்கள் லக்ஷ்மன்  சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர்   ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின.


    திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!

    Posted: 07 Feb 2012 10:18 PM PST

    திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்(இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ்(இந்திய காவல்துறை பணி), ஐ.எஃப்.எஸ்(இந்திய வெளியுறவுப் பணி) மற்றும் ஐ.ஆர்.எஸ்(இந்திய வருவாய் பணி) ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.


    ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!

    Posted: 07 Feb 2012 09:58 PM PST

    ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தலைப்புச் செய்திகள்(08/02/2012)

    Posted: 07 Feb 2012 09:19 PM PST

    அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!

    உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் 'அதிகாரி' என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.


    காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது

    Posted: 07 Feb 2012 08:47 PM PST

    சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.


    என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார் : ப்ரியங்கா

    Posted: 07 Feb 2012 08:43 PM PST

    காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ரா அரசியலில் ஈடுபட ஆர்வங்காட்டுவதாக அண்மையில் செய்தி வெளியானது. இச்செய்தியை பிரியங்கா திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் கணவர் ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டார் என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.


    கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை

    Posted: 07 Feb 2012 08:37 PM PST

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. 







    Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!