Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

LTTE இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; எனது நண்பர்-கருணாநிதி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; அவர் எனது நண்பர்'' என்று முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக மேலும் அவர் ,"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தமிழீழம் என்ற லட்சியம் சரியானது; ஆனால், கையாண்ட முறை தவறானது. பிரபாகரன் குற்றமற்றவர்; அவரது குழுக்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். நான் தீவிரவாதி அல்ல; எனவே பிரபாகரன் எனது நல்ல நண்பர். போரில் அவர் இறக்க நேர்ந்தால் வருத்தப்படுவேன்.

தமிழீழம் அமையும் நிலை ஏற்பட்டால், சர்வாதிகார ஆட்சி அமையும் என ஒரு முறை பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதில் எனக்கு ஒப்புதல் இல்லை என நான் கூறினேன். இந்த விஷயத்தில் எனக்கும் பிரபாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது'' என்று முதல்வர் கருணாநிதி பேட்டியில் கூறினார்.

வீடியோவை காண:-

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!