Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி குவைத் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி இன்று மூன்று நாள் பயணமாக குவைத் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய அரசு சார்பில் உயர் தலைவர் ஒருவர் குவைத் வருகைத் தருவது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

கல்வி, தொழிற்நுட்பப் பங்கீடு முதலியவற்றில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் குடியரசு துணைத்தலைவர் முன்னிலையில் கைச்சாத்திடப்படும் என்று தெரிகிறது.

மேலும், கடலோரப் பாதுகாப்பு, தீவிரவாதத் தடுப்புவழிகள், எண்ணெய்வளம் குறித்தும் ஹமீத் அன்சாரி குவைத் அரசுடன் பேச்சுகள் நடத்துவார் என்று அவர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இத்தாலியில் பூகம்பம் - 50க்கும் மேற்பட்டோர் பலி

Published on: // ,
இத்தாலியின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான லா அகிலா-வில் பூகம்பம் ஏற்பட்டு சுமார் 69பேர் பலியாயினர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஏஜன்ஸி செய்திகள் கூறுகின்றன. இதனிடேயே ரஷ்ய சுற்றுபயணம் மேற்கொள்ளவிருந்த பிரதமர், பெர்லொஸ்கொனி, தனது சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட செல்வதாக, பிரதமர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், துருக்கியும் உலகின் முன்மாதிரி நாடுகள் - அதிபர் ஒபாமா பெருமிதம்

Published on: // ,
தனது ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று துருக்கி சென்ற அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவும், துருக்கியும் உலகிற்கு முன் மாதிரி நாடுகளாக விளங்குகின்றன என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக, முஸ்லிம்கள் நாடான துருக்கி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ சுற்றுபயணம் மேற்கொண்ட அவர், துருக்கியும், அமெரிக்காவும் பரஸ்பர ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிவதன் மூலம் கலாச்சாரங்களுக்கிடையேயான பதற்றத்தை வெகுவாக தணிக்கமுடியும் என்று கூறினார். அமெரிக்கா, கிருத்துவ நாடோ, யூத நாடோ, முஸ்லிம் நாடோ இல்லை என்றும், ஆனால் அமெரிக்க நாட்டு குடிமக்கள் அடிப்படையில் சில நல்ல பண்புகளுக்கு கட்டுபடுவதாக மேலும் கூறினார்.

வெற்றியை நோக்கி இந்தியா - நியூசிலாந்தில் சாதனை படைக்குமா?

நியூலிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 4 விக்கெட்களை இழந்து 167 ரன்கள் எடுத்து இருந்தது. டைலர் 69 ரன்களுடனும், பிராங்ளின் 26 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். முன்னதாக, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடத் துவங்கிய, நியூசிலாந்து, இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் முன்னனி மட்டை வீரர்களை இழந்தது. ஏற்கனவே 1-0 என்ற முன்னிலையில் உள்ள இந்தியா, 2-0 என்ற கணக்கில் இத்தொடரை வெல்லுமா என்பது நாளை தெரியும்.

அசாமில் குண்டு வெடித்து நால்வர் பலி!

கவுஹாத்தியில் இன்று குண்டு வெடித்து நான்கு பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமுற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது உல்பா இயக்ததைச் சார்ந்தவர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!