Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

11 லாரிகள் தீக்கிரை

Published on: வியாழன், 22 ஜனவரி, 2009 // ,
பீஹாரில் உள்ள ரோஹ்டாஸ் மாவட்டத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 11 வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.

இன்று அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் நடந்த இச்செயலை மாவோ கம்யூனிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த நக்சல்கள்தான் செய்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். 

தங்கள் இயக்கத்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் மாவோ கம்யூனிஸ்டுகள் ஜார்கண்ட், பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  முழு அடைப்புக்கிடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சிமெண்ட் கல்யாண்பூரில் உள்ள சிமெண்ட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டவை என்று கூறிய காவல்துறை அதிகாரி, எரியூட்டுவதற்கு முன் ஓட்டுநரையும உதவியாளரை கீழே இறக்கிவிட்டு எரியூட்டியுள்ளனர் என்று கூறினார். முழு அடைப்பு நடக்கும் போது இரவு நேரத்தில் சிமெண்ட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அந்த ஆலைக்கு காவல்துறை ஏற்கனவே கூறியதாகவும் கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர் பரத்ஷா கைது

இந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் வைர வியாபாரியான பரத்ஷா இன்று கைது செய்யப்பட்டார். சில்வசா நீதிமன்றம் வழங்கிய பிணையில் வெளிவரா இயலாத கைது ஆணையின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் மலபார் ஹில் பகுதி காவலர்கள் அந்த ஆணையைப் பெற்று அவரைக் கைது செய்தனர். எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை காவல்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.

ஒபாமா ஆரவாரமான துவக்கம்!

Published on: //
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஆப்ரிக்க-அமெரிக்க வம்சத்தில் வந்த பராக் ஹுசைன் ஒபாமா, பதவியேற்பு முடிந்தக் கையோடு அதிபர் பணிகளை ஆரவாரத்துடன் துவங்கியுள்ளார்.

பதவியேற்பு முடிந்து நேரடியாக வெள்ளை மாளிகை சென்ற ஒபாமா, முதல் வேலையாக தனது பதவியேற்பிற்கு முன், முன்னாள் அதிபர் புஷ் தனது பதவி காலத்தின் இறுதியில் கையெழுத்திட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, தனது தேர்தல் பிரச்சார வேளையில் அளித்திருந்த "குவாண்டனமோ சிறைச்சாலையினை மூடும்" வாக்குறுதியினை நிறைவேற்றும் ஆரம்பப்படியாக, உடனடியாக குவாண்டனமோ கைதிகளின் நீதிமன்ற விசாரணைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று நடக்க இருந்த ஒரு வழக்கினை நீதிபதி பாட்ரிக் பாரிஷ் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

அதிபர் பதிவேற்ற ஒபாமாவின் முதல் நாள் நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!