Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முஸ்லிம் லீக் காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டும் - பிரகாஷ் கரத்

Published on: சனி, 10 ஜனவரி, 2009 //
ஃபலஸ்தீனில் இனப்படுகொலை நடத்தி வரும் தீவிரவாத நாடான இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ள மத்திய அரசிலிருந்து முஸ்லிம் லீக் வெளியேற வேண்டும் என சி.பி.எம் பொது செயலாளர் பிரகாஷ் காராட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

"இஸ்ரேலுடனான மத்திய அரசின் தொடர்பில் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், ஃபலஸ்தீன் விவகாரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு மனப்பூர்வமான நிலைபாடு தான் உள்ளது எனில் வெளியுறவு துறை இணையமைச்சர் பதவியிலிருந்து இ.அஹமது ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இஸ்ரேலுடனான மத்திய அரசின் உறவை முறிக்க வேண்டும் என்ற லீக்கின் தீர்மானம் வரவேற்புக்குரியது. வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல், மத்திய அரசிலிருந்து இராஜினாமா செய்து வெளியேறினால், லீக்கின் நிலைபாட்டைக் கேரள மக்கள் வரவேற்பர்" என கேரளத்தில் நடக்கும் சி.பி.எம் மத்திய கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காராட்டு தெரிவித்தார்.

"இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமெனில் காங்கிரஸ் தலைமையிலுள்ள அரசை வெளியேற்ற வேண்டும். காங்கிரஸை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை வரவிருக்கும் தேர்தலில் சி.பி.எம் எடுக்கும். ஆனால், எவ்வகையிலும் பாஜக ஆட்சிக்கு வருவதை சி.பி.எம் அனுமதிக்காது. காங்கிரஸ் தவிர்த்த மற்ற மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன."

"சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரவாதத்திற்கு முழு உதவியும் செய்து வருகிறது. உலகில் நடக்கும் அனைத்து தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் பின்னணீயில் அமெரிக்காவும் இஸ்ரேலுமே செயல்படுகின்றன. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்காமல் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இயலாது" எனவும் அவர் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!